Friday, August 12, 2011

பெண் உலகில் உயர்ந்தவள்....!


உயிருடல் இரண்டையும் உரிமையாய் சுமந்தவள்
உதிரத்தோடு உணர்வையும் பாலெனச் சுரந்தவள்
துயிலுரும் பொழுதிலும் தூக்கத்தை இழந்தவள்
துணிவுடன் பணிவிடை புரிவதில் சிறந்தவள்
உயரிய துயரிலும் உருகிடாது இருந்தவள்
உலகினைத் தந்தஎன் தாயவள் உயர்ந்தவள்!


தவள்ந்திடும் வயதிலென் கரம்பிடித் தெழுந்தவள்
தந்தையின் பார்வையில் திரம்பட வளர்ந்தவள்
கவளமாம் உணவையும் மகிழ்வுடன் பகிர்ந்தவள்
கனிவுடன் தாயிடம் பரிந்துறை புரிந்தவள்
துவள்ந்திடும் ஆசையை தூசென நினைப்பவள்
தூய்மையாய் வாழுமென் தங்கையும் உயர்ந்தவள்!


பள்ளியில் பயில்கையில் பக்கமாய் வந்தவள்
பணிவுடன் பழகிடும் பக்குவம் கொண்டவள்
புள்ளிகள் பெற்றிட உறுதுணை ஆனவள்
புத்தியை தொட்டிடும் அறிவுறை சொன்னவள்
தள்ளியே சென்றினும் மனதினால் துதிப்பவள்
தயவினில் உயர்ந்துநற் தோழியாய் நிற்பவள்!


நல்லோர்கள் வாழ்த்திட இல்லாளாய் இணைந்தவள்
நாள்தோரும் இல்வாழ்வில் இளமையை பிணைந்தவள்
இல்லாதஒரு நிலமையிலும் இணங்கிவாழ துணிந்தவள்
இருக்கின்ற தைவைத்து இனிதாக்கத் தெரிந்தவள்
பொல்லூண்டும் காலத்திலும் என்தோளைப் பிடிப்பவள்
பொறுமையில் உயாந்துஎன் மனைவியாய் நிலைத்தவள்!


தாய்மையெனும் தகைமையை தன்னுடனே கொண்டவள்
தியாகங்கள் புரிவதிலே முன்னிலையை கண்டவள்
தூய்மையுடன் துணிந்துபல தொண்டுகளும் செய்பவள்
தேசம்தனை ஆளுகின்ற தகுதியதும் உள்ளவள்
வாய்மைனில் நேர்மையினை வாழ்வினிலே காப்பவள்
வனப்புமிகு பெண்ணவள் பாரினிலே உயாந்தவள்!

No comments:

Post a Comment