Friday, August 12, 2011

தாயவளைப் போற்றுவோம்....!


கணவனின் துணையுடன் கனிந்திடும் சுகமது
கருவுருப் பெருகையில் கலைத்ததைக் கொன்றிடா
மனதுடன் சுமந்ததற் குயிருடல் தந்திடும்
மகத்துவ மானதாயை போற்றுவோம் நாளெல்லாம்.


அளந்ததே கிடைத்திடும் நிலையில்லா வாழ்வினில்
அளவில்லா அன்பினை அள்ளியே வழங்கிடும்
தலமெனத் தரணியில் திகழ்ந்திடும் தாயவள்
தயவினை நயத்துநாம் போற்றுவோம் நாளெல்லாம்.


தன்னுயிர், தன்னுடல், தன்பசி தேவைகள்
தன்னிளம் பிள்ளைமுன் பின்னிலை தானென
எண்ணியே எண்ணிலா துன்பங்கள் தாங்கிடும்
ஏற்றம்மிகுந்த தாயை போற்றுவோம் நாளெல்லாம்.


மதங்கூறு மறநெறியை நிதமேற்று நடப்போரை
மற்றோருக் காய்வாழ்ந்ந மரியாதைக் குரியோரை
மதிநுட்ப மதிலுலகை முன்னேரச் செய்தோரை
மண்தரையி லீன்றவளை போற்றுவோம் நாளெல்லாம்


வளர்ந்தபின் வாழ்வதை வழங்கிய அன்னையை
விரட்டிடும் கீழ்த்தரக் குணம்படைத் தோரையும்
தளர்ந்திடா மனதுடன் வாழ்த்திடு மொரேயுயிர்
தாய்மைதான் அவளைநாம் போற்றுவோம் நாளெல்லாம்.

No comments:

Post a Comment